வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நன்றி, கடவுளே

தெரிந்தவனுக்கு அன்று திருமணம்.
பரிசாய் ரூபாய் ஐநூறை
உரிய தோர் 'உறையில்'
பேரின்ப மோடு கொடுத்தான்,,
வாரி வழங்கும் உணர்வில்.

சிற்றுண்டி முடித்து வெளிவந்து
சற்றே சட்டைப்பை தொட்டபோது
உற்ற 'மொய்ப்பணம்' இங்கே..
வெற்று உறையோ அங்கே
முற்றிலும் அதிர்ச்சியில் அவன்.

மறதியில் இப்படியோர் செயல்..
பிறந்தது மனதில் புயல்.
சிறப்பு குன்றிய விதத்தை
மறவாது மாற்றும் முயற்சியில்
விறுவிறுப்பாய் உள்ளே சென்றபோது..

மணமகன் இவனை அழைத்து,
பணமோ, பொருளோ தங்களுக்கு
வேண்டாமென உரைத்து, இனிய
நண்பனது ஆசியன்பு போதுமென்றான்.
மீண்ட வெற்றுஉறையோ இவன்கையில்.. ஆச்சரியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக